Friday 26 April 2013

என் வரிகளில் - செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும் )

பிரபஞ்சத்தில் உள்ள பெண் பூக்கள் எல்லாம்
என்னோடு மோதுதம்மா

பிரபஞ்சத்தில் உள்ள பெண் பூக்கள் எல்லாம்
என்னோடு மோதுதம்மா

பூவெல்லாம் மேடையில் பேசுதம்மா
நாளெல்லாம் "ஆசை "யை ஏசுதம்மா

அம்மம்மா அபாண்டம்
அம்மம்மா  அக்கிரமம்

பிரபஞ்சத்தில் உள்ள பெண் பூக்கள் எல்லாம்
என்னோடு மோதுதம்மா

மல்லி முல்லை பூக்களை   விடவா , ரோசா வாசம் வீசுது
தடாக தாமரை பாஷையைவிடவா ரோசபூவு பேசுது ?

வண்டின் வகை பட்டாம்பூச்சிகள்  தேன்  எடுக்க கூடுது
ஆசைக்கிந்த மோசம் என்ன, ரோசாவை மட்டும் பாடுது

மேடையில் பூக்களின் கண்டனக்குரல்கள் ...

பிரபஞ்சத்தில் உள்ள பெண் பூக்கள் எல்லாம்
என்னோடு மோதுதம்மா

அழகில் சிறந்த ஆம்பலும்  இங்கே , அழுதபடியே போகுது
ஜல்லிக்கட்டு மல்லியும் கூட மல்லுகட்டி மோதுது

பூக்களின் இணை ரோசா உனை  ஏன் படைத்தான்  ஆண்டவன்
திட்டித்தீர்க்க தேடுது பூக்கள் பாவம்  "ஆசை நாயகன் "

ஒளிகிறேன் தப்பிச்சு , மாட்டினால்  போச்சு

பிரபஞ்சத்தில் உள்ள பெண் பூக்கள் எல்லாம்
என்னோடு மோதுதம்மா ...

உலகின்மற்ற பூக்களிடமெல்லாம்  ஏதுமில்லை நிந்தனை
இருந்தும் இந்த ஏச்சுக்கள் ஏனோ ,மனதில் மிகவும் நொந்தனை

வாடை பூக்களின் மேடை பேச்சு , என் மனவலி கூட்டு

No comments:

Post a Comment