Thursday 25 April 2013

அடடா ! இது என்ன அதிசயம் ??...

அறுபத்தி ஒன்பது அகவையே ஆனாலும்
அழகில்,அறிவில்,அங்க அவயங்களில்
குரலினில் , பேசும் பேச்சினில்
வெளிவிடும் மூச்சினில்
மயக்கும் மனதினில்
இனிக்கும் நினைவினில்
இன்னமும் அப்படியே
பத்தொன்பது வயதை விட்டு
படி தாண்ட மாட்டாளோ ??

அடடா ! இது என்ன அதிசயம் ??

பருவ சக்கரம் பழுதடைந்து விட்டதா ???
புரியவில்லை ???
இல்லை,ஒருவேளை
பாவி அவன் ,கால பகவனும்
அவள் முன் கவிந்துவிட்டானா ??
தலை குப்பிற கவிழ்ந்து கிடக்கும்
இந்த கபோதியை போல் ??
தெரியவில்லை ??......

No comments:

Post a Comment