Saturday 27 April 2013

ஹைக்கூ - 1

என் வரிகள் ஒவ்வொன்றும்
வசீகரமாய் இருப்பதாய் சொல்லி
சொல்லி ரசிக்கும் வசீகரியே !
வசீகரத்திற்கு காரணம் ஏதும் ரகசியமில்லை
வசீகரியுன்னை வசீகரித்திடவே
வார்த்தைகளை வசப்படுத்தி
வசபடுத்திய வார்த்தைகளை வரிசைபடுத்தி
வரிவரியாய் வரைந்திடும் ,
வரிகள் வசீகரம் !!

வசீகரம் !!
???????????????????????????????????????????????????????????????
 
 
கொள்ளை அழகினில் - என்
உள்ளம் கொள்ளை கொள்ளும்
அளவினில், சற்றே எல்லை மீறி
எனக்கு தொல்லை தந்திடும்
அவ்விரு முல்லைகளை தாங்கிடும்
கொடி தேகமோ ?
தேகம் கொடியோ ?

கொடி ....
??????????????????????????????????????????????????????????????????
கற்சிலைகளையும், சித்திரங்களையும்
சற்றும் சட்டைசெய்யாத என் மனம்
பொற்சிலையாய் மிளிர்ந்திடும்
உயிர்சிலை உன்னிடம் எக்கச்சக்கமாய்
சிக்கியதுதான் விசித்திரம் ....

விசித்திரம் ....
??????????????????????????????????????????????????????????????/
 கவின்மிகு கவிதையேதும்
எழுதிடும் குறிக்கோளுடன்
கவிஎழுத அமர்வதில்லை
நிச்சயமாய் ஓர்நாளும்

உன் நினைவுத்தடத்தினில்
கற்பனைக்குதிரைகளின் தடம்பதிய
ஓடவிட்டேதான் அமர்ந்திடுவேன்
கவிஎழுத கரிக்கோளுடன்

வெளிப்படும், வரிகளின்
வனப்பிற்கும் ,வசீகரத்திற்க்கும்
வளமான , நின் நினைவே
துணை ..!!
?????????????????????????????????????????????????????????
 
 
பாரினில் பரவலாய்
பலரினில் பரவியிருந்தும்
அப்பாவியான, இப்பாவியின்
பிஞ்சு நெஞ்சமதில்
தஞ்சமென உட்புகுந்து
வஞ்சமெனும் நஞ்சதனை
கொஞ்சமும் கலந்திட முடியாததால்
கடலினையே விஞ்சிடும் அளவு
கடும் பொறாமையில்
பொறாமை ....

இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி ....
 

No comments:

Post a Comment