Sunday 28 April 2013

" காதல் வேள்வி


    காதலன் - காதலில், உனக்காக காத்திருப்பேன் நான் அன்பே !

    காதலி - காதல் இல்(லை) எனினும் உனக்காக காத்திருப்பேன் அன்பே !.

    காதலன் - கண்ணிமையே, உன் கண்களுக்கு கவிகூட்டுதேன்றேன் , கவியில்

    காதலி - கண் ணின் மையே,காதல உன் கவி வரிகளுக்கு காரணம், வேறில்லை.


    காதலன் - வரந்தருவேன் வா , என்போல் ஓர் உயிரினை உனக்கு, பெரும் வரமாய்

    காதலி - வர தருவேன் வா , எண்ணம்போல் எனையே உனக்கு அரும் வரமாய் .

    காதலன் - நீரில்லா மீன்போல துடித்தேன் தினம் நான் அங்கு

    காதலி -நீர் இல்லா என்னிலையும் அஃதே தான் இங்கு, மாற்றமில்லை .

    காதலன் - சரித்திரம் போற்றசெய்வேன் , அன்பே நம் காதலினை காவியமாய்
    காதலி - சரி திறம் அறிந்தே கண்ணா, நம் காதலை மனதினில் பதித்திருக்கின்றேன் ஓவியமாய் .

    காதலன் -நீர்நிலையாய் நான் இருப்பேன் , நீ குளிர என் நெஞ்சம் நிறைந்த அஞ்சுகமே !

    காதலி நீர் நிலையாய் இருக்க , எனை என்ன செய்யும் எவர் வஞ்சகமே ?.

    காதலன் - தாமரை விழிகொண்டவளே ! உன் வர்ப்பார்வை தருவாயா ?
    காதலி - தா மரையின் விழியாள் தான், ஆனால் தாவுகின்ற மானல்ல உன் மடிதவழும்
    சிறு மான் நான், பார்வை வரம் கோருகிறாய்,எனையே அரும் வரமாய் தரத்தயார்
    பெருவாயா?

    காதலன் - தலைப்பு ஒன்று தெரிவிப்பாய ? இப்பதிப்பும் நல் மதிப்பை பெருவதற்க்கு !

    காதலி - தலை பூவை தந்தவனே , தருகின்றேன் தருகின்றேன் , கடுகளவும்     
    காதலில்லா வரிகளுக்கே இடும்பொழுது, இப்பதிப்பிர்க்கு என்ன குறை                "                           "    "காதல் வேள்வி " எனதலைப்பு இடுவதற்க்கு ??
   

No comments:

Post a Comment