Monday 29 April 2013

என்னவளே உனக்காக !!

அழகே அழகே 
உலகின் மிக அழகானவற்றிர்க்கோர்
போட்டி வைத்தால்
முதலாய் வரும் முதன் முதலே !

முழு பிரபஞ்சத்தினிலும்
அழகு நிலவு மகளவள்
தன் விருப்ப  நிலைநிலமாய்
இருக்க விரும்புவது  உன் நுதலே !

ஆசை என்றால் ஆசையே அற்று
வாழவேண்டி பற்றுகொண்ட
புத்தனுக்கே லேசான ஆசை எனும்போது
ஆசை மீது, உனக்கும்  கொள்ளை ஆசைதானே ?

நான் வரி பதிக்கும் போது நீ
பதிப்பதில்லை ஏதும் பதிப்பை
பதிக்கதபோது பதிப்பாய்
சூட்சுமமாய் , உன் மதி பதிப்பை

பதிப்பபை ,நீ பதித்த மறுகணமே
படித்து நானறிவேன் ,
மணக்கும் மலர் உன்  மனதின்
மதிமயக்கும் வாசத்தின் மதிப்பை,

ரத்தினமே , முத்தினமே , சித்திரமே
இன்னும் எத்தனை நாள்
உன் மனதை பொத்திவைப்பாய்  ?

ஆசையின் மீதான உன் ஆசை அதை
இன்னும் எத்தனை நாள்
என்னிடம் சொல்வதை  ஒத்திவைப்பாய் ?

என்னவளே உன் மனதை எனதோடு
இணையாக என்றும் சேர்த்திருப்பேன்

நான் பதிக்கும் பதிப்புகளின் முழுமதிப்பே !
துணையாக என்றும் காத்திருப்பேன்



       என்னவளே உனக்காக !!

No comments:

Post a Comment