Wednesday 24 April 2013

உன் அறிமுகத்திற்கு முன்பும் - பின்பும்....

உன்  அறிமுகத்திற்கு  முன்புகூட 
நான்  கவிதை  எழுதித்தான்  வந்தேன்

அப்போது  ( இன்  அறிமுகத்திற்கு முன்பு  )

கற்பனை  குதிரைகள்  கண் திறப்பதற்கு
கன காலம்  காத்திருக்கவேண்டியிருக்கும் 

தட்டி  தடுமாறி , வார்த்தைகள்  இடம்  மாறி
தப்பி தவறி , தவறாய்த்தான் வரி   பதிப்பேன்

இப்போதெல்லாம்  ( உன் அறிமுகத்திற்கு பின்பு )

M.A.M ராமசாமி  யின்  குதிரைகளையே  ஓட்டத்தில்

சவால்  விடும்  வகையில்  வெளுத்துகட்டுகின்றன 
கட்டுகடங்கா  என்  கற்பனை குதிரைகள்

அப்போதும் ( உன் அறிமுகத்திற்கு முன்பு )

வர்ணனைக்கும்  ,ஒப்பீட்டிர்க்கும் 
வறண்ட  வார்த்தைகள் வசமாகும் 
தடைபட்டு  தடைபட்டு கிடைக்கும் 
தமிழக  மின்சாரம்  போல

இப்போது  ( உன்  அறிமுகத்திற்கு பின்பு )

தங்கு  தடை  ஏதும்  கண்டே  கண்டிராத
உன் அன்பையும்  பாசத்தையும்  போல  !

No comments:

Post a Comment