உன் அறிமுகத்திற்கு முன்புகூட
நான் கவிதை எழுதித்தான் வந்தேன்
அப்போது ( இன் அறிமுகத்திற்கு முன்பு )
கற்பனை குதிரைகள் கண் திறப்பதற்கு
கன காலம் காத்திருக்கவேண்டியிருக்கும்
தட்டி தடுமாறி , வார்த்தைகள் இடம் மாறி
தப்பி தவறி , தவறாய்த்தான் வரி பதிப்பேன்
இப்போதெல்லாம் ( உன் அறிமுகத்திற்கு பின்பு )
M.A.M ராமசாமி யின் குதிரைகளையே ஓட்டத்தில்
சவால் விடும் வகையில் வெளுத்துகட்டுகின்றன
கட்டுகடங்கா என் கற்பனை குதிரைகள்
அப்போதும் ( உன் அறிமுகத்திற்கு முன்பு )
வர்ணனைக்கும் ,ஒப்பீட்டிர்க்கும்
வறண்ட வார்த்தைகள் வசமாகும்
தடைபட்டு தடைபட்டு கிடைக்கும்
தமிழக மின்சாரம் போல
இப்போது ( உன் அறிமுகத்திற்கு பின்பு )
தங்கு தடை ஏதும் கண்டே கண்டிராத
உன் அன்பையும் பாசத்தையும் போல !
No comments:
Post a Comment