Sunday 28 April 2013

உன்னாலே உன்னாலே ..

தன்னைவிட எழில்நிறைந்த
உயர் கவிக்காக
ஓர் உயிர் கவிக்காக
சரமாக்கபடுவதை எண்ணி
சிலகாலமாய்
தாழ்வுமனப்பான்மையில்
தவித்து வந்த
என் கவிதைகள்


தினம் தினம் தவறாது
கவிதைகளை  நீ
தரிசிப்பதாலும்
வாசித்து ரசிப்பதனாலும்

இப்பொழுதெல்லாம்
கடும் தலைக்கனத்துடன்
திரிகின்றன ...

No comments:

Post a Comment