தன்னைவிட எழில்நிறைந்த
உயர் கவிக்காக
ஓர் உயிர் கவிக்காக
சரமாக்கபடுவதை எண்ணி
சிலகாலமாய்
தாழ்வுமனப்பான்மையில்
தவித்து வந்த
என் கவிதைகள்
தினம் தினம் தவறாது
கவிதைகளை நீ
தரிசிப்பதாலும்
வாசித்து ரசிப்பதனாலும்
இப்பொழுதெல்லாம்
கடும் தலைக்கனத்துடன்
திரிகின்றன ...
No comments:
Post a Comment