என் நினைவுகளுக்கு மட்டுமே
இத்தனை வரிகளா ? என
செல்லமாய் கோபித்துக்கொள்ளும்
என் செல்லமே !
நீ இல்லாத பொழுதுகளில்
என்னை சுவாசிக்க வைப்பதே
உன் நினைவுகள் தான் .
வா, நீயும் வா !
வசந்தமான உன் வாசம் அதை
என் வசம் தா !
ஒரு சிலமணிநேர
சுவாசம் தந்தால்
ஓராயிரம் கவிதைகள் உனக்கும் உண்டு
வா நீயும் வா .!
No comments:
Post a Comment