Thursday 25 April 2013

இதயமானவளே ! உனக்காக !

நான் இல்லா பொழுதுகளில்
நீ எப்படி உணர்ந்தாய்?
என்னவெல்லாம் உணர்ந்தாய் ??

என ஒரு சிறு கேள்வி எனை கேட்டால் .
வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு ரீதியில்
வெவ்வேறு விதமான நிலைகளின்  நிலைபாட்டை
விளக்கமாய் விளக்குவேன் !

நீ நீங்கிய நேரங்களில் என் நிலைகள்

மருத்துவ ரீதியில் சொல்வதானால்
சுயநினைவே இல்லாதிருந்தேன் !

ஆன்மீக ரீதியில் சொல்வதானால்
சபிக்கபட்டிருந்தேன் !

பொருளாதார ரீதியில் சொல்வதானால்
திவாலாகி இருந்தேன் !

அரசியல் ரீதியில் சொல்வதானால்
அதிரடியாய் பதவிநீக்கம் செய்யபட்டிருந்தேன் !

அலுவலக ரீதியில் சொல்வதானால்
தற்காலிக பணிநீக்கம் செய்யபட்டிருந்தேன் !

கவித்துவ ரீதியில் சொல்வதானால்
கற்பனைத்திறன் களவாடபட்டிருந்தேன் !

ஓர் மாவட்டத்தின் ஆட்சியாளர் ரீதியில் சொல்வதானால்
பிணை கைதியாய் கடத்தபட்டிருந்தேன் !

சென்னைவாசியின் ரீதியில்  சொல்வதானால்
200 *c   பாகை செல்சியஸ்  வெப்பத்தினை அனுபவித்திருந்தேன்

உன் இதயம் கவர்ந்தவன் எனும் ரீதியில் சொல்வதானால்
இதயத்துடிப்பையே நிறுத்தி வைத்திருந்தேன் !

இதயமானவளே ! உனக்காக !

No comments:

Post a Comment