Thursday 25 April 2013

அணைப்பிலும் நீ...

கொளுத்தும்   கோடையில்  வெளுத்து வாங்கும்
வெப்பத்தின் தாக்கத்தையும் புறந்தள்ளிவிடும்
நெருப்பாய் தகித்தபடி எனக்குள் இருக்கும்
கவிதை கனல்களின் தாக்கம் .
தகிக்கும் தகிப்பினை தணிக்கும் விதமாய்
தரமாய், அரும்பெரும் வரமாய், வரிகளை
தரத்தான், தந்து பெறத்தான்  தவிக்கின்றேன்.
தகிக்கும் தணலின் தாக்கம் அணைத்திட
நினைத்தே, பதிக்கின்றேன் பதிப்புகளை
அப்படி பதிக்கும் பதிப்புக்கள் அனைத்திலும்
மட்டுமின்றி அணைப்பிலும் நிறைந்திருப்பது நீ ......

No comments:

Post a Comment