Sunday 28 April 2013

தனியார்மயம் ...

வீடில்லா மக்கள் 35 % தாண்டிய
ஈடில்லா நாடு நம் இந்திய ..
மக்களின் ஊழியர்தம்  , மனதினில்
ஊறிய ஊழலினை ஒடுக்கிட
ஓயாமல் உண்ணாவிரதமிருப்பவர்
ஒருபுறம் தடுத்திட , அவரோ
ஊழலின் உக்தியை துரிதமாய்  முடுக்கிட 
திடுக்கென அடிக்கடி எடுத்திடும்
தற்காலிக திசைதிருப்பலே .

தனியார்மயம் ....
===========================================================

ஊடகத்தின் மானக்கேடு

"சகானா கர்ப்பம்,
 யார் காரணம் "
நாட்டில் பெயர்போன
நாளேடு ஒன்றின்
தலையங்கம் இது

படித்ததும் அப்படியே
வாய் பிளந்துவிட்டேன்

"நாளேட்டால்  உயரும் நாடு  "
எனும் தலைப்பினில்
ஆண்டுவிழாவில் பேசும்
வாய்ப்பை இழந்து விட்டேன் .

No comments:

Post a Comment