Friday 26 April 2013

முத்தத்தின் மகத்துவத்தை
சித்தம்போல் அத்தனையும்
மொத்தமாக பதித்திட்டதாய்
மெத்தனமாய் இருந்துவிட்டேன்

மெத்தனமாய் இருந்திட்டதை

தித்திக்கும் தேன் கருத்தாக
எழுத்தினில் நீ பதித்திட்ட
கருத்ததுதான் சுமந்துவந்த
சுத்தமான (அன்பு) முத்தமது
சத்தமின்றி எத்திவைத்தது
பித்துபிடித்த  என் புத்திக்கு .....
********************************************************
"முத்தம்"

உச்சரிக்கப்படும்
ஒருசிலநொடிகளும்
பிரிந்திருக்க பிரியமின்றி தான்
உடனுக்குடன்
ஒட்டிக்கொள்கின்றதோ
இதழ்கள் ??


*********************************************************
உலகின் மிக மிக
அதிக முத்த்தங்களை
பரிமாறிக்கொண்டவர் தம்
பெயர் பட்டியலில்
கடற்கரை(கடல்+கரை ) க்கடுத்து
இரண்டாமிடம் பிடித்திட  
நெடுநாட்களின் ஆசை ..

தருவதும்,தந்து பெறுவதும்
நீயாக இருக்க ....
*********************************************************
கொஞ்சி கொஞ்சி
கெஞ்சி கெஞ்சி முத்தம்பல
நித்தம்நித்தம் இட்டிடுவாயென

வாழ்நாள் முழுவதும்
குழந்தையாகவே  இருந்திடும்
அரும்பெரும்  வரம் வேண்டி
கடுந்தவம் இருந்திட
தெரியாமல், துணிந்திருப்பேன் .



இதோ,வாலிபத்திலும் கூட
அற்பநெனக்கு ,அரும்வரமது
அதிர்ஷ்டமாய் வாய்த்திடுமென
அறியாமலே !!

No comments:

Post a Comment