Saturday 27 April 2013

பிரிவினால்.பிறந்த.வலி(ரி)கள்.......


நீ இல்லா பொழுதுகளில் 
தடுமாறும் என் மனநிலை
கடும் தட்டுபாட்டில் தத்தளிக்கும்
தமிழக மின்சாரத்துறையை விட
படுமோசம் .....

***********************************
அமைதியாக தானே அமர்ந்து
என் நிலைபாட்டினை நிலைபடுத்துகின்றேன் ?
இருந்தும் ஏனோ ?
உன் நினைவுகள், என் மனதை
தடியடி , தண்ணீர் பீய்ச்சி அடித்தளை தாண்டி
துப்பாக்கிச்சூடு நடத்தி அட்டூழியம் செய்கிறது ???

***********************************
காலவரையற்ற   பதிப்பிடா  போராட்டத்தில் அமர்ந்தவனை
கலந்தாலோசித்து  பேச்சுவார்த்தை நடத்துவோமென, உன்
கவின் முகத்தை கையூட்டாய் காட்டிக்கொடுத்து
கள்ளத்தனமாய் என் போராட்டத்தை களைத்த
கல் நெஞ்சக்காரி நீ !

***********************************

ஓரிருநாள் பிரிவையையே
ஓர் யுகபோராட்டமாய்  கடந்திடும் பொழுது
சர்வசாதாரணமாய் , ஒரு வாரம் பிரிந்து செல்ல
உன் மனம் எப்படி சம்மதித்தது ??
ஓஹோ !
தமிழகத்தின் பெண்  நீ எனும் நினைப்பு தந்த
தாயுள்ள தவப்பரிசோ ??

No comments:

Post a Comment