Thursday 25 April 2013

நீ நலம் தானே ?

நலம்  தானே ? நலம் தானே ?
சினம் கொண்டிருக்கும் சுவைத்தேனே ,
செந்தேனே நீ நலம் தானே ?

நீ இல்லா பொழுதுகளிலும் நான்
தேனாய் இல்லாவிட்டாலும் ஏதோ
தானாய் சில வரி பதித்தேன் 
எப்படி என்றால்
செவித்திறன் குறைந்த சிலர்
செவிதிறனே சுத்தமாய் அற்ற சில
மாற்றுதிரனாளிகள் முன்னால்
பய பக்தியுடன் ,முழு அர்ப்பணிப்புடன்
முகாரி ராகம் பாடும் பாகவதரை போல !

கேட்பார் பேச்சு கேட்டு ,உண்மைக்கும்
பொய்மைக்கும் பாகுபாடு அறியா
பேதையாய் போனதை எண்ணி வருந்தவா ?

என் வீட்டு வரி கட்டி வந்தால் அவ்வரிக்கும்
வரிவரியாய் வரியிட்டு விமர்சனம் வரையும்
ஒரு வரி தேவதையை தற்காலிகமாய்
இழந்து தவிப்பதை எண்ணி வருந்தவா?

விடை நீயே ! 

No comments:

Post a Comment