போலியான
கதைபுனைந்து
பற்பல
பெண்பூக்களினை
நெருக்க
தொடர்புடைய
தோழிகளாய் பாவித்து
உன்னோடு
உரையாடும் (உறவாடும்)
தருணங்களில்
மறவாது எடுத்துரைப்பேன்,
அழகொழுகும்
தேவதை நீ
ஆத்திரத்தின் மாத்திரத்தில்
கேலியது
என மறந்து
தற்காலிக காளியாக
சீரிஎழுவதை
கேளிக்கையாய்
காண்பதற்க்கு.
No comments:
Post a Comment