என்னவளே ! என்னவளே !
அன்றும் , இன்றும், என்றும் என்னவள் நீ ...
வெறும், வரிகளின் வழியாகவே என்னை திண்னவள் நீ
கொஞ்சி பேசும் கொஞ்சும் குரலால் என்னை கொன்னவள் நீ
ஒரு மாதிரி சாயலில் உன் தமிழ் இருந்தாலும்
எப்படியோ ஒரு வழியாய் தென்னவள் நீ
அறுவதை நீ அடைந்தாலும் எப்போதும் இருவதை போல்
இருக்கும் சின்னவள் நீ
நான் சோதனையில் ,சில சமயம் சோர்வான போதும்
உருக்கமாய், உற்சாகமாய் கவி பதிக்க சொன்னவள் நீ
இத்தனைக்கும் முத்தாய்ப்பாய் இதோ இந்த முத்து பதிப்பை
பதிப்பதற்கு முழு முதற்காரணம் நீ ....
No comments:
Post a Comment