இறைவன் என்பவன் இருந்தால் -அவனுக்கு
இரக்கம் என்பது இம்மி அளவேனும் இருந்தால்
இன்றிருந்தாவது இரு நிலைகளிலும் (உடல்நிலை ,மனநிலை )
இன்னல்கள் ,இடைஞ்சல்கள் ,இடையூறுகள் ஏதும் இன்றி
இளம் கிழவி இன்பமாய் இளைப்பாற ( தூங்க ) வேண்டும் என்று
இன்றல்ல நேற்றல்ல தொன்று தொட்டு இறைஞ்சி வருகிறேன் இறைவனிடம் .
இறைவனிடம் , என் இறைஞ்சல்கள் சென்றடைய
இடை இடையே சிறிதாய் ,பெரிதாய் பல தடைகள் போல ?
இன்றுதான் , தடைகள் பல கடந்து ,இறைவனிடம் அடைந்தது போல
இறைஞ்சல்களுக்கு நறும் விடையை - எல்லாம் வல்ல
இறைவனின் அருட்கொடையை இனிமையாய் , இன்பமாய்
இன்றும் , இனி என்றும் இளைப்பாறுவாய் ! என
இறுதியாய் ,அறுதியாய் ,உறுதியாய் நம்புகிறேன் !
No comments:
Post a Comment