Sunday 28 April 2013

ஹைக்கூ -2


எச்சரிக்கை ...
காய்ச்சலே காய்ச்சலே
மொட்டு மலரவள்  பட்டு மேனியை
விட்டுவிட்டு வெளியேறிவிடு
அழகு ரதியவள் ஆதரவு இருந்ததனால்
இத்தனை நாள் உன்னை விட்டிருந்தேன்
இதோ, இன்றுதான் உனக்கு கடைசி கெடு
இல்லாவிடில் , தகிக்கும் கத்திரி சூரியனில்
உன்னை படுத்தி காய்த்து எடுத்திடுவேன்
துரிதமாய் கிளம்பிடு 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++  
சுவடுகள்...
தென்றலை போல் , நறுமணம் போல்
மழையினை போல் - நீ, திடுக்கென
தோன்றி திடுக்கென மறைந்தாலும்
குளிரை போல் ,வாசத்தை போல்
இலைசிந்தும் மழைத்துளிகளை போல்
ஒரு பொழுதும் ,விட்டு செல்ல மறப்பதில்லை
உன் இனிமை நினைவுகளை
சுவடுகளாய் 
  
படபடப்பு...
தேர்வறைக்குள் நுழைவதர்க்கான
கடைசி சில நிமிட துளிகளில்
படபடப்ப்பு , அவசர அவசரமாய்
புரட்டிப்பார்க்கும், புத்தகத்தை போல்
புரட்டிப்பார்கின்றேன் என் கவிதை
வலைபக்கங்களை, வந்திருக்காதா
உன் பதில்கள் என ..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
அன்புப்பார்வை  
நனைகிறதே, உயிரின்   வேர்கள்
அன்புடன்,அன்பாய் பொழிந்திடும்
அன்பின் கன மழையினில்

திடும்மென்றே தோன்றிடும்,சிலரின்
கொடுங்கருத்துக்களை  கடுகளவும் மதியா
அன்பர்கள்தம் அன்புப்பார்வையினில்...

 
   

No comments:

Post a Comment