Friday 26 April 2013

காதல் ஹைக்கூ ....

நான் வேண்டாத வரமெல்லாம்
ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில்
வந்தடைந்தும் மனதில் மகிழ்ச்சியில்லை
மனம், தவமாய் தவம் இருக்கும்
உன் இதழ்கள் தரும் வரம்
கிடைக்காததனால்.....

முத்தம் 
 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
 
மரிக்கொழுந்து,கஸ்தூரி
சந்தனம்,ஜவ்வாது
எலிசபெத் அர்டேன் ,கால்வின் களின்
ரோசா,மல்லி அத்தர்
இவை அனைத்திலும் இல்லாதது
உன் சுவாசத்தில்

வாசம்
 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தாராள மனம் கொண்ட தன தேவதையே !
உன்னிடம் இருந்து தொடர் வரம் பெறவே
தொடர்ந்து (சிறு சிறு ) தவறுகள் எனும்
தவம் புரிகின்றேன் ....

மன்னிப்பு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
என் வாழ்வில் ஓர் இடம்கூட
விதைத்துவிட கூடாதென
வெறுத்தொதுக்கிய விதை
உன்னால் ,என் வாழ்வின் மீதே
இன்று விருட்சமாய்

எதிர்பார்ப்பு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
என் அறிமுகத்திற்கு முன்புவரை
என்னவளின் உயிர்தோழியாய்
உடனிருந்தவள், இன்றோ
நெடுந்தூர சொந்தமாய்
வந்து வந்து போகிறாள்
எப்பொழுதாவது ......

கண்ணீர்
 
 
 
 
 
 

No comments:

Post a Comment