அன்பே !
ஆண்டுகள் பல
உருண்டோடிவிட்டது
நீயும் நானும் பேசத்துவங்கி
பேசினோம் , பேசினோம்
பேசுகின்றோம், பேசுகின்றோம்
இனியும் இனிக்க,இனிக்க
பேசுவோம்,பேசுவோம்
உண்ண,உண்ண
அன்னம் அது குறையாதது
அட்சய பாத்திரமாம் ,
பேச பேச ஆசையே தீரலையே
நீயும் என்ன ,
பேசும் அட்சயபாத்திரமோ ?
பழக பழக பாலும் புளிக்குமாம் ?
பருக பருக தேனும் திகட்டுமாம் ?
பேச பேச திகட்டுவதில்லையே ?
அட , திகட்டுவதிருக்கட்டும்
திகட்டுவதாய் தோன்றவும் இல்லையே !
உன் நினைவுகளுக்கு தான்
எத்தனை இனிமையடி !
எத்தனை வலிமையடி !
ஆண்டுகள் பல
உருண்டோடிவிட்டது
நீயும் நானும் பேசத்துவங்கி
பேசினோம் , பேசினோம்
பேசுகின்றோம், பேசுகின்றோம்
இனியும் இனிக்க,இனிக்க
பேசுவோம்,பேசுவோம்
உண்ண,உண்ண
அன்னம் அது குறையாதது
அட்சய பாத்திரமாம் ,
பேச பேச ஆசையே தீரலையே
நீயும் என்ன ,
பேசும் அட்சயபாத்திரமோ ?
பழக பழக பாலும் புளிக்குமாம் ?
பருக பருக தேனும் திகட்டுமாம் ?
பேச பேச திகட்டுவதில்லையே ?
அட , திகட்டுவதிருக்கட்டும்
திகட்டுவதாய் தோன்றவும் இல்லையே !
உன் நினைவுகளுக்கு தான்
எத்தனை இனிமையடி !
எத்தனை வலிமையடி !
No comments:
Post a Comment