Friday 26 April 2013

எதிர்பார்ப்புகள் ஆயிரம் .....

எத்தனைத்தான்  சுத்தத்தமிழில்
பக்கம்பக்கமாய்  கவிதை பதித்தாலும்
ஒருமுறை - உன் முத்து மேனி மொத்தத்திலும்
முத்தமொழிக்கவிதை  சுத்தமாய் எழுதிட ...

நிரந்தரக்குடியுரிமை கொண்டு உன்னில்
குடியமர்ந்துவிட்ட  வேலைப்பளுவை,
மன அழுத்தம்தனை துணையாய் சேர்த்து
அகதியாய், இலங்கைக்கு அனுப்பி குண்டடியில் கொன்றிட ....

நிறைவான , நிலையான, நிரப்பமான
நம்பிக்கையும், நிதர்சன இன்பத்தையும், உன்னில்
நிறைய நிரப்பிக்கொண்டு , குறைவாய்
எனக்கும் கொஞ்சம் கடனை கொண்டிட .....

அனுதினமும் அணுஅணுவாய் அன்னமுனை
உருக்கி,உலுக்கி , உருக்குலைத்திடும்
வேலைப்பளூவதர்க்கு கட்டாய ஓய்வளித்து
தேவைக்கேற்ற ஓய்வுடன் பூவை நீ இருந்திட .....

மரபுகளை மறந்து . உறவுகளை துறந்து
தூரங்கள் கடந்து , மன பாரங்கள் இறந்து
உனக்காக மட்டுமே  நானாக , எனக்காக மட்டுமே நீயாக
என்  மடியினில்  நீயும் ,உன் மார்பினில் முகம்புதைத்து நானும்
ஓர் முழுநாள் முழுதாய் இருந்துச்சிறந்திட.சிறந்தே இறந்திட



இப்படி,எத்தனை எத்தனையோ  என்னுள்

எதிர்பார்ப்புகள் ஆயிரம் .....

No comments:

Post a Comment