தான் சுவாசிக்கும் சுவாசத்தை காட்டிலும்
தன் தேசத்தை உண்மையாய் ,உயிராய்
உள்ளுனர்வைபோல் உணர்பூர்வமாய்
நேசிக்கும் ஒரு தேசபக்தனின் நேசத்தை
வேசமாய் பாவித்து கொஞ்சமும் யோசிக்காமல்
கொடும் வாள் வீசியதுபோல் எதேதோ
ஏசி பேசுவதை கேட்டு மனம் கூசி நிற்கும்
அத்தேசபக்தனின் அதே மனநிலையில் இருக்கின்றேன்
உன் உண்மை நேசபக்தன் நான் ....
No comments:
Post a Comment