தெரிந்தோ, தெரியாமலோ நீ புரியும்
சிறு சிறு தவறுகளை , நான்
தெரிந்தும் தெரியாததை போல
இருந்துவிடுவேன் நீ தானே என்று .
அப்படியே இருந்து இருந்து பழகியதாலோ ?
உன் தவறுகளுக்கு அவ்வளவாய் நான்
வருந்தியதில்லை ...
இருந்தும் , வருந்தும்படியாய் ஏதும்
தவறுகளே நேர்ந்தாலும் . நான்
வருந்ததொடங்கும் முன்பே
உன்சிரிப்பு,பொன்சிரிப்பு ,புன்சிரிப்பு
வந்துவிடும் மருந்தாய் ...
வருந்தும் முன் அருந்தும் வகை
மருந்தாய், உன் சிரிப்பு என்றால்
மனம் மருங்கும் பொழுதுகளில்
விருந்தின் வகையாய் உன் பேச்சு !
சுருங்கா உன் முகம் பார்த்து
சுருங்கி விரியும் என் இதயம் .தன்
செயல்பாட்டை நிருத்திவிடுமோ
No comments:
Post a Comment