Sunday 28 April 2013

என் கவிதை அனுபவம்...

அருகம்புல்லின் சாறினை அதிகாலையில்
வெறும் வயிற்றினில் பருகும் போது
கசப்பின் கடுமை குரல்வளையை பிடித்தாலும்
பருகியப்பின் அதனால் நாம்பெறும்
குணநலன் அது பன்மடங்கு பெருகுவதை போல்

கவிதை என்பது படைக்கும் வரை
கடினங்களிலேயே மிக கடினம்
படி சிரத்தைக்கு பிறகு படித்துவிட்டால் - பின்
பெறுகின்ற பரவசமோ பழரசம் போல்

என் கவிதை அனுபவம்.

2 comments:

  1. உன்னதமான அனுபவம் எனக்கும் உண்டே.அருமை

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும்
      வாசித்தமைக்கும்
      வாழ்த்தியமைக்கும்

      நன்றிகள்

      Delete