Saturday 27 April 2013

ஏன் இத்தனை கடுமையோ ?

கவிதையே !

என் கவிதைக்காதலியே !

உன் பெயர் , எண்ணம்,பதிப்பு
செயல், செயற்பாடு ,அணுகுமுறை,பேச்சு,
என ஒவ்வொன்றும் இனிமையாயிருக்க
தனிமை பொழுதுபார்த்து தாக்குதல் புரியும்
நினைவுகள் மட்டும் எப்படி
எதிர்மறையாய் ?

"லேடி காகா" வினை பின்தொடரும்
30 கோடி "டுவிட்டர்களை"போல்
அனுதினமும் உன் நினைவுகளையே
நிதம்நிதம் பின் தொடரும்
என் மனதின் மீது
ஏன் ?? இத்தனை கடுமையோ ?

ஒருவேளை, கரைக்காதலியை காண
காலகாலமாய் தொடர்ந்து முயற்சிக்கும்
அலைக்காதலன் போல்
இவனில்லை என்பதாலோ ??

No comments:

Post a Comment