தொன்றுதொட்டே அருந்தமிழ் மீதுனக்கு
ஈர்பொன்று இருந்திருக்கவேண்டும் - ஆதலாலே
இன்றுதொட்டுனக்கு கவிதையின் மீது காதல்.
நற்கவிதைகளின் தீரா காதலி தானே நீ ??
என் வரிகளை எப்படி கவிதை என்கின்றாய் ??
உன் கவிக்கண் கொண்டு காண்பதனால்தானோ??
சரிசரி , இந்த அற்பனுக்கு ஒரு அற்ப சந்தோஷம் ...
வறுமையில் வாடிடும் கரை (மனம்) ஈதெனும்
சிறுமையினை அறிந்தோ , அறியாமலோ , அனுதினம்
நிதம்நிதம் நினைவலைகளை நிரம்ப அனுப்புகிறாய்
கருணைக்கடலே !
நின் நிகரில்லா கருணைக்கு, நான் நிகர்செய்ய
நினைந்தாலும் , ஏதும் ஆர்வத்தில் முனைந்தாலுமது
நீல்கடலினில் வீசப்பட்ட ஒற்றை குருனைக்கு நிகராகும் .
எனைகேட்டால், உன்மேல் உயிர் (காதல் ) வைத்தான்
உந்தன் ஊன்மேல் உயிர் (காமம்) வைத்தான்
என்பதை விட, நீ ரசிக்க, நீ ருசிக்க, நினைவுகொள்ளும்
நேரங்களில் நினைந்து, நினைந்து கசிந்துருக
உன் உயிரில் ஒன்றிரண்டு கவிதை வைத்தான்
எனும் பெயர் போதுமே !
கவிதை உள்ள காலம் வரை என் நினைவுகளும் வாழும் !
ஈர்பொன்று இருந்திருக்கவேண்டும் - ஆதலாலே
இன்றுதொட்டுனக்கு கவிதையின் மீது காதல்.
நற்கவிதைகளின் தீரா காதலி தானே நீ ??
என் வரிகளை எப்படி கவிதை என்கின்றாய் ??
உன் கவிக்கண் கொண்டு காண்பதனால்தானோ??
சரிசரி , இந்த அற்பனுக்கு ஒரு அற்ப சந்தோஷம் ...
வறுமையில் வாடிடும் கரை (மனம்) ஈதெனும்
சிறுமையினை அறிந்தோ , அறியாமலோ , அனுதினம்
நிதம்நிதம் நினைவலைகளை நிரம்ப அனுப்புகிறாய்
கருணைக்கடலே !
நின் நிகரில்லா கருணைக்கு, நான் நிகர்செய்ய
நினைந்தாலும் , ஏதும் ஆர்வத்தில் முனைந்தாலுமது
நீல்கடலினில் வீசப்பட்ட ஒற்றை குருனைக்கு நிகராகும் .
எனைகேட்டால், உன்மேல் உயிர் (காதல் ) வைத்தான்
உந்தன் ஊன்மேல் உயிர் (காமம்) வைத்தான்
என்பதை விட, நீ ரசிக்க, நீ ருசிக்க, நினைவுகொள்ளும்
நேரங்களில் நினைந்து, நினைந்து கசிந்துருக
உன் உயிரில் ஒன்றிரண்டு கவிதை வைத்தான்
எனும் பெயர் போதுமே !
கவிதை உள்ள காலம் வரை என் நினைவுகளும் வாழும் !
No comments:
Post a Comment