Saturday 27 April 2013

என் உயிருக்குள் கவிதை வைத்தான் .

தொன்றுதொட்டே அருந்தமிழ் மீதுனக்கு
ஈர்பொன்று   இருந்திருக்கவேண்டும் - ஆதலாலே
இன்றுதொட்டுனக்கு கவிதையின் மீது காதல்.

நற்கவிதைகளின் தீரா காதலி தானே நீ ??
என் வரிகளை எப்படி கவிதை என்கின்றாய் ??

உன் கவிக்கண்  கொண்டு காண்பதனால்தானோ??

சரிசரி , இந்த அற்பனுக்கு ஒரு அற்ப சந்தோஷம் ...

வறுமையில் வாடிடும் கரை (மனம்) ஈதெனும்
சிறுமையினை அறிந்தோ , அறியாமலோ , அனுதினம்
நிதம்நிதம் நினைவலைகளை நிரம்ப அனுப்புகிறாய்
கருணைக்கடலே !

நின் நிகரில்லா  கருணைக்கு,  நான்  நிகர்செய்ய
நினைந்தாலும் , ஏதும் ஆர்வத்தில்  முனைந்தாலுமது
நீல்கடலினில் வீசப்பட்ட ஒற்றை குருனைக்கு நிகராகும் .

எனைகேட்டால், உன்மேல் உயிர் (காதல் ) வைத்தான் 
உந்தன் ஊன்மேல் உயிர் (காமம்) வைத்தான்
என்பதை விட, நீ ரசிக்க, நீ ருசிக்க, நினைவுகொள்ளும்
நேரங்களில்  நினைந்து, நினைந்து கசிந்துருக
உன் உயிரில் ஒன்றிரண்டு கவிதை வைத்தான்
எனும் பெயர் போதுமே !

கவிதை உள்ள காலம் வரை என் நினைவுகளும் வாழும் !

No comments:

Post a Comment